- Details
- Category: என் நேசரே தியானங்கள்
அவர் நீதியிலும் நியாயத்திலும் பிரியப்படுகிறார்; பூமி கர்த்தருடைய காருணியத்தினால் நிறைந்திருக்கிறது. - சங்கீதம் 33:5
அன்புள்ள ஆண்டவரே, உமது அன்பின் நிமித்தமாக எனது வாழ்வில் நீர் தந்த ஆசீர்வாதங்களுக்காக உமக்கு நன்றி. உமது காருணியத்தினால் என்னைச் சூழ்ந்து கொண்டதற்காக நன்றி. உமது நீதியிலும் நியாயத்திலும் என்னை வழிநடத்தி வருவதற்காக நன்றி.
நான் உம்மை நாடும்போது உமது நிலையான அன்பு என்னை நிலைநிறுத்தட்டும். உமது இறக்கத்தைப் பெற்றவருக்கு மட்டுமின்றி, உமது இறக்கத்தைப் பெறாதவருக்கும் உமது நாமத்தின் நிமித்தமாக கிருபை அருள்வீராக. ஆமென்.
மனுஷனே, நன்மை இன்னதென்று அவர் உனக்கு அறிவித்திருக்கிறார்; நியாயஞ்செய்து, இரக்கத்தைச் சிநேகித்து, உன் தேவனுக்கு முன்பாக மனத்தாழ்மையாய் நடப்பதை அல்லாமல் வேறே என்னத்தைக் கர்த்தர் உன்னிடத்தில் கேட்கிறார். - மீகா 6:8
- Details
- Category: என் நேசரே தியானங்கள்
கர்த்தருடைய வார்த்தை உத்தமமும், அவருடைய செய்கையெல்லாம் சத்தியமுமாயிருக்கிறது. - சங்கீதம் 33:4
அன்புள்ள ஆண்டவரே, உமது வார்த்தையின் நிமித்தம் நீர் என் வாழ்க்கையில் செய்துவரும் செயல்களுக்காக நன்றி. உம்முடைய வார்த்தை என்னை உம்மிடமிருந்து விலகாமல் பாதுக்காத்து வருவதற்காக நன்றி. உமது வார்த்தைகள் மூலமாக என் விசுவாசத்தை மீண்டும் மீண்டும் புதுப்பித்து, என்னை தேற்றுவதற்காக நன்றி. உமது கிருபை என் வாழ்வில் ஒவ்வொரு நாளும் சூரியனைப் போல உதித்து, ஏற்படுத்தும் மாற்றங்களுக்காக நன்றி.
மனிதன் விழுந்தாலும், கடவுளுடைய வார்த்தை நிலைத்திருக்கும். அவருடைய வார்த்தை ஒருபோதும் விழாது. கடவுளுடைய வார்த்தையின் வல்லமையால் விழுந்த எவரும் மீண்டும், மீண்டும் எழுந்து நிற்க முடியும்.
- மார்ட்டின் லுத்தர்.
- Details
- Category: என் நேசரே தியானங்கள்
நீதிமான்களே, கர்த்தருக்குள் மகிழ்ந்து களிகூருங்கள்; செம்மையான இருதயமுள்ளவர்களே, நீங்கள் எல்லாரும் ஆனந்த முழக்கமிடுங்கள். - சங்கீதம் 32:11
எங்கள் பரமதகப்பனே இவ்வுலகில் இனத்தாலும், கலாச்சாரத்தாலும், மொழியாலும் பிரிந்து கிடக்கும் நாங்கள், உம்மை வெவ்வேறு வழிகளில் தொழுதுகொள்ளுகிறோம். எங்கள் வழிபாட்டு முறைகள் எவ்விதமாய் இருப்பினும், நாங்கள் ஆவியிலும், உண்மையிலும் உம்மை தொழுதுகொள்ள வேண்டும் என்று சங்கீதக்காரனுடைய இந்த வார்த்தைகள் மூலமாக நீர் எங்களுக்கு உணர்த்துவதற்காக
நன்றி!
இந்த அழைப்பின் மூலமாக நாங்கள் மனமகிழ்ச்சியுடன் ஆனந்த சத்தமிட்டு உம்மை துதிப்பதை நீர் விரும்புகிறீர் என்று அறிகிறோம். இந்நாள் முதல் நான் உம்மை ஆனந்த சத்தமிட்டு உம்மை துதிப்பேன். எனது உள்ளத்தை உமது மகிழ்ச்சியால் நிறப்பும்படி உம்மை வேண்டிக்கொள்கிறேன்.
விசுவாசிகளை சோகங்களும், வேதனைகளும் நிறைந்த வாழ்க்கை வாழ்வதாக ஊடகங்கள் சித்தரிக்கின்றன. ஆனால் அதற்கு மாறாக அன்றாடக வாழ்க்கையில், விசுவாசிகளே இந்த உலகில் மற்றவர்களுக்காக சேவை செய்வதின் மூலமாகவும், மற்றவர்களை மகிழ்விப்பதின் மூலமாகவும் அதிக மகிழ்ச்சியான வாழ்க்கை வாழ்கிறார்கள்.
- Details
- Category: என் நேசரே தியானங்கள்
கர்த்தாவே, சிறுமைப்பட்டவர்களுடைய வேண்டுதலைக் கேட்டிருக்கிறீர்; அவர்கள் இருதயத்தை ஸ்திரப்படுத்துவீர்.
மண்ணான மனுஷன் இனிப் பலவந்தஞ்செய்யத் தொடராதபடிக்கு, தேவரீர் திக்கற்ற பிள்ளைகளுக்கும் ஒடுக்கப்பட்டவர்களுக்கும் நீதிசெய்ய உம்முடைய செவிகளைச் சாய்த்துக்கேட்டருளுவீர். - சங்கீதம் 10:17-18
எங்கள் பரலோகத் தகப்பனே, உம்மை நான் பற்றிக்கொண்டதால் எனக்கு கிடைத்த நன்மைகள் அதிகம். குழப்பமும் நிலையற்றதுமான இந்த உலகில் மன அமைதியுடனும், மன உறுதியுடனும் என்னால் வாழ முடிகிறது. இந்த வீழ்ந்து போன உலகில் நிறைந்திருக்கும் தீமைகளால் நான் பாதிக்கப் பட்ட போதெல்லாம், நீர் என்னைக் காத்து என்னை தீமைக்குத் தப்புவித்தீர். இந்த பாவ உலகின் தீமைகள் ஒருபோதும் என்னை சோர்வடையவோ, அழிக்கவோ, மேற்கொள்ளவோ அனுமதிக்காமல் நீர் என்னை காத்துக் கொண்டீர்.
நமது பரமத் தகப்பனிடம் நமது தேவைகளையோ, உதவிகளையோ கேட்க ஒருபோதும் தயங்கத் தேவையில்லை. நமது அமைதியான வாழ்க்கையில் நமது துதிகளையும், நன்றிகளையும் எப்படி ஏற்றுக் கொள்ளுகிறாரோ , அதேபோல் நமது ஆபத்து காலங்களிலும் அவர் நமது விண்ணப்பங்களைக் கேட்கிறவாராகவும் பதிலளிக்கிறவராகவும் இருக்கிறார்.
- Details
- Category: என் நேசரே தியானங்கள்
கர்த்தாவே, உம்மைத் தேடுகிறவர்களை நீர் கைவிடுகிறதில்லை; ஆதலால், உமது நாமத்தை அறிந்தவர்கள் உம்மை நம்பியிருப்பார்கள். - சங்கீதம் 9:10
எங்கள் பரமதகப்பனே! எங்கள் பாவங்களுக்குத் தக்கதாக எங்களை நியாயம் தீர்க்காமல், உமது கிருபையின் நிமித்தம் எங்கள் பாவங்களில் இருந்து எங்களுக்கு மீட்பைத்தாரும். எங்கள் இதயம் விழித்துக் கொள்ளும்போதெல்லாம் எங்கள் பாவங்கள் எமக்கு முன் தோன்றாமல், உமது கிருபையும், மீட்பும் மட்டுமே எங்கள் நினைவிலும், சிந்தனைகளிலும் வரட்டும்.
இன்று கடவுளின் கிருபையையும், அவர் என்னை எனது பாவங்களில் இருந்து மீட்டதை மட்டுமே என் நினைவில் வைத்துக் கொள்வேன்.
- Details
- Category: என் நேசரே தியானங்கள்
என் புலம்பலை ஆனந்தக் களிப்பாக மாறப்பண்ணினீர்; என் மகிமை அமர்ந்திராமல் உம்மைக் கீர்த்தனம்பண்ணும்படியாக நீர் என் இரட்டைக் களைந்துபோட்டு, மகிழ்ச்சியென்னும் கட்டினால் என்னை இடைகட்டினீர். சங்கீதம் 30:11.
குளிர்காலத்தின் மௌனம் கலைந்து, வசந்தகாலத்தின் மகிழ்ச்சி மலரத் துவங்குகிறது. சர்வவல்லமையுள்ள ஆண்டவரே, பூமியில் பருவகாலங்களை உருவாக்கியவர் நீர் என்பதை நான் அறிவேன். இந்த பருவகாலங்கள், என் சொந்த வாழ்க்கையின் பருவங்களை மிக அழகாக பிரதிபலிக்கிறது.
நான் சோதனை காலங்களில் இருந்தபோது இனி என் வாழ்க்கை ஒருபோதும் முன்பு போல் மாறாது என்றே தோன்றியது. என் இதயம் துக்கத்தால் உறைந்திருந்தது. வேதனையில் அமிழ்ந்து போனேன். ஆனால் நாட்கள் நகர நகர, காலங்கள் மாற என் வேதனைகள் மறையத் துவங்கியது. என் இதயம் அமைதி அடைந்து. என் உள்ளத்தில் மகிழ்ச்சி துளிர்க்க ஆரம்பித்தது. இவை எனது ஆத்துமா ஒரு புதிய பருவத்தை அடைந்ததை உணர்த்தியது. என் ஆண்டவரே, நான் மறந்து போன வாழ்க்கையை மீண்டும் வாழ மென்மையாக கற்றுத்தந்த உமது கிருபைக்காக நன்றி!
உங்கள் வாழ்வில் நடக்கும் எந்த காரியமும் உங்கள் மனதை சோகத்தால் நிறப்ப ஒருபோதும் அனுமதிக்காதீர்கள். - அன்னை தெரசா
- Details
- Category: என் நேசரே தியானங்கள்
கர்த்தருடைய பரிசுத்தவான்களே, அவரைக் கீர்த்தனம்பண்ணி, அவருடைய பரிசுத்தத்தின் நினைவுகூருதலைக் கொண்டாடுங்கள். - சங்கீதம் 30:4
என் ஆண்டவரே, நான் இப்பொழுது மனதாலும், உடலாலும் சோர்ந்து உள்ளேன். உம்மை துதித்து பாடும் மனநிலையோ, சக்தியோ எனக்கு இல்லை. என்றாலும், நீர் என் வாழ்வில் செய்துவரும் ஒவ்வொரு செயல்களை நினைக்கும் போது , நீர் துதிக்குப் பாத்திரர் என்பதை உணருகிறேன்.
என் சொந்தக் குரலில், நான் உம்மைத் துதித்து பாடமுடியாமல் போனாலும், மற்றவர்கள் உம்மைத் துதித்துப் பாடல்களை பாடும்போது, அந்த ஆராதனைகளில் பங்குபெறவோ, தொலைக்காட்சி, வானொலி போன்ற தொழில்நுட்ப உதவியுடன், உமது துதி பாடல்களை ஒலிக்கச் செய்து, எனது ஆத்துமா அந்த பாடல்களோடு இசைந்து, உம்மை துதிக்கவும், உம்மை மகிமை படுத்ததும் நினைவைத் தாரும். ஒவ்வொரு நாளும் நான் உமது புகழைப் பாட எனக்கு வாய்ப்பைத் தாரும். என் வாழ்நாளின் ஒவ்வொரு நொடிப்பொழுதும் உம்முடைய நாமத்தை உண்மையோடு மகிமை படுத்த கற்றுத்தாரும்.
நமது துதிப் பாடல்கள் வானசேனைகளைப் போல் ஒலிக்காமல் இருக்கலாம். நமது குரல் வளத்ததையோ இசை ஞானத்தையோ கடவுள் மதிப்பீடு செய்வதில்லை. நமது உள்ளத்தில் இருந்து எழும் இசையையும், எண்ணத்தையும், அதன் நோக்கத்தையுமே காண்கிறார்.