கர்த்தர் ஜலப்பிரவாகத்தின்மேல் உட்கார்ந்திருக்கிறார்; கர்த்தர் என்றென்றைக்கும் ராஜாவாக வீற்றிருக்கிறார்.
கர்த்தர் தமது ஜனத்திற்குப் பெலன்கொடுப்பார்; கர்த்தர் தமது ஜனத்திற்குச் சமாதானம் அருளி, அவர்களை ஆசீர்வதிப்பார். சங்கீதம் 29:10-11

நீர் என் ராஜா, என் ஆண்டவரே. உம்முடைய நாமம் ஆசீர்வதிக்கப்பட்டது.
உமது மிகுந்த அன்பின் வல்லமையினால் பூமியை ஆளுகிறீர்.
நீர் எமது உள்ளங்களில் வாசம் செய்து எம்மை போதித்து மனசமாதானத்தை தந்து வழிநடத்துகிறீர்.
நீர் உம்முடைய பிள்ளைகளுக்கு  மகத்துவமமும், நெருக்கமுமானவர்.
நீரே என் கர்த்தரும், நேசருமானவர். என் ஜீவனுள்ள நாளெல்லாம் உம்மை துதிப்பேன்.  

கடவுள் எல்லையற்ற வட்டம்
அதன் மையம் எல்லா இடங்களிலும் உள்ளது
அதன் சுற்றளவு எங்கும் இல்லை.
- புனித ஆகஸ்டின்