எங்கள் ஆண்டவராகிய கர்த்தாவே, உம்முடைய நாமம் பூமியெங்கும் எவ்வளவு மேன்மையுள்ளதாயிருக்கிறது. - சங்கீதம் 8:9

ஆனந்தமாய், ஆனந்தமாய், உம்மை துதிக்கிறோம்.
மகிமையின் தேவனே! அன்பின் ஆண்டவரே!
எம் இதயம் பூவைப் போல் மலர்கிறது.
சூரியன் மேலே உதிக்கும்போது,
பாவமும், சோகமும் மறைகிறது;
சந்தேக இருளை விரட்டுகிறது;
அழியாத மகிழ்ச்சியைக் கொடுப்பவரே!
மெய் ஒளியால் எம்மை நிரப்புமே!
-ஹென்ரி வோன் டைக்

பூமியை ஆளுகின்றவர்களுடைய  அதிகாரம் இறைவனால் வழங்கப்படும் கொடை.
மனிதனின் ஞானமோ, அறிவோ, பெலமோ, செல்வமோ பூமியில் ஒரு புல்லை கூட உருவாக்க  முடியாது. ஆனால் பிரம்மாண்ட மலைகளும், இயற்கையின் செழிப்பும், ஆழ் கடலும், கர்த்தருடைய வார்த்தையால் உருவானவை!