அவர் நீதியிலும் நியாயத்திலும் பிரியப்படுகிறார்; பூமி கர்த்தருடைய காருணியத்தினால் நிறைந்திருக்கிறது. - சங்கீதம் 33:5

அன்புள்ள ஆண்டவரே, உமது அன்பின் நிமித்தமாக எனது வாழ்வில் நீர் தந்த ஆசீர்வாதங்களுக்காக உமக்கு நன்றி. உமது காருணியத்தினால் என்னைச் சூழ்ந்து கொண்டதற்காக  நன்றி. உமது நீதியிலும் நியாயத்திலும் என்னை வழிநடத்தி வருவதற்காக நன்றி.

நான் உம்மை நாடும்போது உமது  நிலையான அன்பு என்னை நிலைநிறுத்தட்டும். உமது இறக்கத்தைப் பெற்றவருக்கு மட்டுமின்றி, உமது இறக்கத்தைப் பெறாதவருக்கும் உமது நாமத்தின் நிமித்தமாக கிருபை அருள்வீராக. ஆமென்.

மனுஷனே, நன்மை இன்னதென்று அவர் உனக்கு அறிவித்திருக்கிறார்; நியாயஞ்செய்து, இரக்கத்தைச் சிநேகித்து, உன் தேவனுக்கு முன்பாக மனத்தாழ்மையாய் நடப்பதை அல்லாமல் வேறே என்னத்தைக் கர்த்தர் உன்னிடத்தில் கேட்கிறார். - மீகா 6:8