கர்த்தருடைய வார்த்தை உத்தமமும், அவருடைய செய்கையெல்லாம் சத்தியமுமாயிருக்கிறது. - சங்கீதம் 33:4

அன்புள்ள ஆண்டவரே, உமது  வார்த்தையின் நிமித்தம்  நீர் என் வாழ்க்கையில் செய்துவரும் செயல்களுக்காக நன்றி. உம்முடைய வார்த்தை என்னை உம்மிடமிருந்து விலகாமல் பாதுக்காத்து வருவதற்காக நன்றி.  உமது வார்த்தைகள் மூலமாக என் விசுவாசத்தை  மீண்டும் மீண்டும் புதுப்பித்து, என்னை தேற்றுவதற்காக நன்றி. உமது கிருபை என் வாழ்வில் ஒவ்வொரு நாளும் சூரியனைப்  போல உதித்து, ஏற்படுத்தும் மாற்றங்களுக்காக நன்றி.

மனிதன் விழுந்தாலும், கடவுளுடைய வார்த்தை நிலைத்திருக்கும்.  அவருடைய வார்த்தை ஒருபோதும் விழாது. கடவுளுடைய வார்த்தையின் வல்லமையால் விழுந்த எவரும் மீண்டும், மீண்டும் எழுந்து நிற்க முடியும்.   
- மார்ட்டின் லுத்தர்.