உமது விரல்களின் கிரியையாகிய உம்முடைய வானங்களையும், நீர் ஸ்தாபித்த சந்திரனையும், நட்சத்திரங்களையும் நான் பார்க்கும்போது, மனுஷனை நீர் நினைக்கிறதற்கும், மனுஷகுமாரனை நீர் விசாரிக்கிறதற்கும் அவன் எம்மாத்திரம் என்கிறேன். - சங்கீதம் 8:3-4


ஆண்டவரே, என்மீது உள்ள உமது அன்பின் ஆழம் என்னை பிரமிக்கவைக்கிறது.  என்னைப் பற்றிய உமது யோசனைகள் எண்ணில்  அடங்காதவை. எனது வாழ்க்கைக்கான உமது திட்டம் நேர்த்தியும், நிரந்தரமுமானவை.  

இந்த பிரபஞ்சத்தில் நீர் என்னை வெறும் பொருளாகக் கருதினால், நான் ஒரு தூசியிலும் அர்ப்பமானவன்.   
ஆனால் நீரோ என்னை உமது பிள்ளையாக நடத்தி, உமது கிருபையினால் முடிசூட்டியிருக்கிறீர். என் ஆண்டவரே உமது அன்பிற்கு நான் என்னைத்  தாழ்த்துகிறேன்.  உம்மை பணிகிறேன். என் தேவனே நான் உமக்குச் சொந்தமாக இருப்பதிலும்,  உம்மோடு உறவாடுவதிலும் மகிழ்கிறேன்.

மனுஷனை நீர் நினைக்கிறதற்கும், மனுஷகுமாரனை நீர் விசாரிக்கிறதற்கும் அவன் எம்மாத்திரம் என்கிறேன்.