கர்த்தாவே, உம்மைத் தேடுகிறவர்களை நீர் கைவிடுகிறதில்லை; ஆதலால், உமது நாமத்தை அறிந்தவர்கள் உம்மை நம்பியிருப்பார்கள். - சங்கீதம் 9:10

எங்கள் பரமதகப்பனே! எங்கள் பாவங்களுக்குத் தக்கதாக எங்களை நியாயம் தீர்க்காமல், உமது கிருபையின் நிமித்தம் எங்கள் பாவங்களில் இருந்து எங்களுக்கு மீட்பைத்தாரும். எங்கள் இதயம் விழித்துக் கொள்ளும்போதெல்லாம் எங்கள் பாவங்கள் எமக்கு முன் தோன்றாமல், உமது கிருபையும், மீட்பும் மட்டுமே எங்கள் நினைவிலும், சிந்தனைகளிலும் வரட்டும்.   

இன்று கடவுளின் கிருபையையும், அவர் என்னை எனது பாவங்களில் இருந்து மீட்டதை மட்டுமே  என் நினைவில் வைத்துக் கொள்வேன்.