- Details
- Category: என் நேசரே தியானங்கள்
உற்சாகத்துடன் நான் உமக்குப் பலியிடுவேன்; கர்த்தாவே, உமது நாமத்தைத் துதிப்பேன். அது நலமானது. - சங்கீதம் 54:6
அன்புள்ள ஆண்டவரே, உம்மீது உள்ள எனது அன்பின் அடையாளமாகவும், நீர் எனக்கு செய்த நன்மைகளுக்காக நன்றி செலுத்தும் விதமாகவும், நான் உமக்கு ஏதாவது செய்ய விரும்புகிறேன். பழைய ஏற்பாட்டு நாட்களில், அவர்கள் தானியங்களையும், கால்நடைகளையும், பறவைகளையும், பரிசுப்பொருட்களையும் உமது ஆலயத்திற்கு காணிக்கையாக கொண்டு வந்தார்கள். நானும் உமக்கு எனது பணத்தை கொடுக்கலாம் என்று நினைக்கிறேன். எனது திருச்சபைக்கோ அல்லது ஒரு தொண்டு நிறுவனத்திற்கோ நன்கொடை அளிக்கலாம் என்று நினைக்கிறேன்! ஆனால் அது விரைவில் ஒரு வணிக பரிவர்த்தனையாக மாறி, பல செலவுகளில் ஒரு செலவாக மாறிவிடுகிறது. நானோ உமக்கு அர்த்தமுள்ள ஒன்றை, எனது அற்பணிப்பை வெளிப்படுத்த விரும்புகிறேன். எனது நேரமாக இருக்கலாம்! எனது கலைப் படைப்பாக இருக்கலாம்! அல்லது வறுமையில் இருக்கும் உமது பிள்ளைகளுக்கு உதவி செய்து அவர்களை மகிழ்விக்கலாம்! என்னிடமிருந்து நீர் என்ன வகையான செயலை விரும்புகிறீர்? நான் என்ன செய்ய வேண்டும் என்று எனக்குக் காட்டும்.
கடவுளுக்கு நாம் செலுத்தக் கூடிய காணிக்கை நமது இருதயம் மட்டுமே. அதை ஒவ்வொரு முறையும் வெவ்வேறு விதத்தில், வெவ்வேறு வடிவத்தில் வித்தியாசமாக அலங்கரித்து அதை வழங்குகிறோம். சில சமயங்களில் பணமாகவோ, பொருளாக, நமது நேரமாகவோ , கலைப் படைப்பாகவோ , ஏன் நமது புகழை கூட அவருக்கு அர்ப்பணிக்கலாம். நமது கிரியைகளை அல்ல அவர் விரும்புவது நமது இதயங்களையே!
- Details
- Category: என் நேசரே தியானங்கள்
இக்கட்டில் எங்களுக்கு உதவிசெய்யும்; மனுஷனுடைய உதவி விருதா. - சங்கீதம் 108:12
மனிதர்கள் எனக்கு உதவ மறுத்து விட்டார்கள். என் தேவனே, நான் அதினால் சோர்ந்துபோய் இருக்கிறேன். இப்போதும் நான் வேதனையில் இருக்கிறேன். எனக்கு நீர் மட்டுமே உதவ முடியும். நான் என்னை நீதிமான் என்று கூற இயலாது; நான் குறைகள் நிறைந்த மனிதனே. எனது பிரச்சனைகளுக்கு உமது உதவி மட்டுமே பதில். உமது சித்தத்தின்படி உமது தெய்வீக பெலத்தையும், ஞானத்தையும் கொண்டு எனக்கு இறங்குவீராக! சோம்பல் மற்றும் அசமந்தத்தை என்னை விட்டு நீக்குவீராக. என்னை அழுத்தும் சோதனைகளை எதிர்த்துப் போராட எனக்கு பெலனை தருவீராக. என்னை வெறுக்கிறவர்களை அமைதி படுத்தி, எனது சத்துருக்களைப் புறம்பே தள்ளுவீராக. இந்த உலகில் உமது சித்தத்தை நான் செய்ய எனக்குத் தேவையான மனஉறுதியையும், திடநம்பிக்கையையும் எனக்குக் தந்தருளுவீராக. ஆமென்!
மாம்சமெல்லாம் புல்லைப்போலவும், அதின் மேன்மையெல்லாம் வெளியின் பூவைப்போலவும் இருக்கிறது... புல் உலர்ந்து பூ உதிரும்; நமது தேவனுடைய வசனமோ என்றென்றைக்கும் நிற்கும்.
ஏசாயா 40:6,8
- Details
- Category: என் நேசரே தியானங்கள்
வானங்கள் மகிழ்ந்து, பூமி பூரிப்பாகி, சமுத்திரமும் அதின் நிறைவும் முழங்குவதாக. நாடும் அதிலுள்ள யாவும் களிகூருவதாக; அப்பொழுது கர்த்தருக்கு முன்பாக காட்டு விருட்சங்களெல்லாம் கெம்பீரிக்கும். - சங்கீதம் 96:11-12
செல்போன் ஒலி, விரைந்து செல்லும் வாகனம், கடந்து செல்லும் ரயில், குழந்தையின் அழுகை, இடியின் முழக்கம், அலையின் ஓசை, மழையின் இரைச்சல், நாயின் குரைச்சல், சொட்டும் நீர் என ஆண்டவரே, இந்த உலகம் பல சத்தங்களால் நிரம்பியுள்ளது.
இவை சில சமயங்களில் எனக்கு இரைச்சலாக தோன்றுகிறது. சில சத்தங்கள் என்னை எச்சரிக்கின்றது. சிலவை என்னை அச்சுருத்துகின்றது. இவைகள் என் இதயத்தில் சில சமயங்களில் அமைதியின்மையை ஏற்படுத்துகின்றது. எனக்கு அமைதியை தாரும் தேவா, என்னை ஆறுதல்படுத்தும்.
ஆனால் இந்த சத்தங்கள் அனைத்தும் உமது தெய்வீக இசையின் ஒரு பகுதியாக இருக்குமோ என என் உள்ளத்தில் கேள்வி எழுகிறது? ஒருவேளை எனக்கு புரியாத இசையாக இருக்குமோ என்று தோன்றுகிறது?
எலக்ட்ரான்கள், ஒலி அலைகள், செவி இவை அனைத்தும் உமது படைப்பல்லவா! இந்த ஒலி அனைத்தும் உம்மால் அல்லவா உருவாக்கப்பட்டவை! ஒரு வேளை இவை உமது தெய்வீக இசையின் பகுதிகளாக இருப்பின், இவற்றை ரசிக்க, இவற்றை புரிந்துகொள்ள எனக்கு ஞானத்தை தாரும்.
பூமியின் குடிகளே, நீங்கள் எல்லாரும் தேவனுக்கு முன்பாகக் கெம்பீரமாய் பாடுங்கள். அவர் நாமத்தின் மகத்துவத்தைக் கீர்த்தனம்பண்ணி, அவருடைய துதியின் மகிமையைக் கொண்டாடுங்கள். - சங்கீதம் 66:1-2
- Details
- Category: என் நேசரே தியானங்கள்
தேவனைப் பாடி, அவருடைய நாமத்தைக் கீர்த்தனம்பண்ணுங்கள்; வனாந்தரங்களில் ஏறிவருகிறவருக்கு வழியை ஆயத்தப்படுத்துங்கள்; அவருடைய நாமம் யேகோவா, அவருக்கு முன்பாகக் களிகூருங்கள். - சங்கீதம் 68:4
அன்புள்ள ஆண்டவரே, நீர் சர்வ வல்லவர். அனாதி காரணர் என்று உம்மை துதிக்கவும், உம்மைக் குறித்து அறிக்கை செய்யவும் விரும்புகிறேன். நான் உம்முடைய பிள்ளை என்று அழைக்கப்படுவது எனக்கு கிடைத்த பெரிய பாக்கியம். அதற்காக நான் மகிழ்கிறேன்.
எனது அன்றாட சவால்களின் மத்தியில், அந்த உண்மையை நான் உனருகிறேன். "நீர் மேகங்களில் வருகிறவர்" என்று சங்கீதக்காரன் உம்மைக் குறித்து பாடுவது உமது மகத்துவத்தை குறித்தது என்று எனக்குத் தெரியும்.
எல்லா கிரியைகளிலும் உமது வல்லமை இருப்பது எனக்குத் தெரியும். ஆனால் நான் அதை எனது உணர்வுகளால் உணர முடியுமா? உமக்குத் தெரியும் எனது வாழ்க்கையில் உள்ள ஏமாற்றம், போராட்டம், வெற்றி, மகிழ்ச்சி இவற்றால் எனது வாழ்க்கை சில சமயங்களில் பிரகாசமாகவும், சில சமயங்களில் மேகமூட்டத்தை போலவும் உள்ளது.
எனினும் எனக்கு தேவையான நேரங்களில் இருண்ட அந்த மேகங்களில் இருந்தே மழையை வரச் செய்வது போல், எனது வாழ்க்கையில் தேவையான நேரங்களில் உமது ஆசீர்வதங்களை வற்திக்கப் பண்ணுகிறீர்.
கர்த்தாவே நீர் எல்லா காலங்களுக்கும் காரணராக இருக்கிறீர். சோதனையான நாட்கள் என் வாழ்வில் உமது ஆசீர்வாதங்களை பொழியவே என்று அறிவேன்.
என் சகோதரரே, நீங்கள் பலவிதமான சோதனைகளில் அகப்படும்போது, உங்கள் விசுவாசத்தின் பரீட்சையானது பொறுமையை உண்டாக்குமென்று அறிந்து, அதை மிகுந்த சந்தோஷமாக எண்ணுங்கள். நீங்கள் ஒன்றிலும் குறைவுள்ளவர்களாயிராமல், பூரணராயும் நிறைவுள்ளவர்களாயும் இருக்கும்படி, பொறுமையானது பூரணகிரியை செய்யக்கடவது. - யாக்கோபு 1:2-4
- Details
- Category: என் நேசரே தியானங்கள்
சங்கீதம் 18:30 தேவனுடைய வழி உத்தமமானது; கர்த்தருடைய வசனம் புடமிடப்பட்டது; தம்மை நம்புகிற அனைவருக்கும் அவர் கேடகமாயிருக்கிறார்.
வாக்கு மாறாத என் பரம தகப்பனே, இம்மட்டும் நீர் எனக்குத் தந்த வாக்குறுதிகளை நிறைவேற்றி வருவதற்காக, உம்மை துதிக்கிறேன், போற்றுகிறேன், வனங்குகிறேன்.
நீர் என்னோடு எப்போதும் இருந்து எனக்கு சுகம், பெலன், ஜீவனைத் தருவேன் என்று நீர் உரைத்து அதை நிறைவேற்றி வருவதற்காக உமக்கு நன்றி.
நீர் எனக்கு சமாதானத்தையும் , சந்தோஷத்தையும் தருவேன் என்று உரைத்த வாக்கை நிறைவேற்றி வருவதற்காக உமக்கு நன்றி.
உனக்கு எதிராக வரும் தீமைகளில் இருந்து உன்னை விடுவிப்பேன் என்று உரைத்த வாக்கை நிறைவேற்றி,
இக்கட்டான காலங்கள் வரும் எனினும் அந்த இக்கட்டுகளில் இருந்து உன்னை விடுவிப்பேன் என்று உரைத்த வாக்கை நிறைவேற்றி வருவதற்காக உமக்கு நன்றி.
அநேக நேரங்களில் கடவுள் நம்மை, நாம் சுயமாக எடுக்கும் முட்டாள்தனமான முடிவுகளில் இருந்து நம்மை காக்க வேண்டும். நம்மில் பெரும்பாலானோர் நான் எங்கு செல்லவேண்டும், எப்படி செல்லவேண்டும் என்று எனக்குத் தெரியும் என்று நினைப்பது உண்டு. ஆனால் வனாந்திரங்களில் ஆறுகளை உண்டு பண்ணுகிற கடவுளுக்கு, நம்மை விட நமக்கு எந்த வழி நல்ல வழி என்று தெரியும்.
- Details
- Category: என் நேசரே தியானங்கள்
பஞ்சைப்போல் உறைந்த மழையைத் தருகிறார்; சாம்பலைப்போல் உறைந்த பனியைத் தூவுகிறார். அவர் தமது கல்மழையைத் துணிக்கைகளாக அனுப்புகிறார்; அவருடைய குளிருக்கு முன்பாக நிற்பவன் யார்? அவர் தமது வார்த்தையை அனுப்பி, அவைகளை உருகப்பண்ணுகிறார்; தமது காற்றை வீசும்படி செய்ய, தண்ணீர்கள் ஓடும். சங்கீதம் 147:16-18
கர்த்தாவே, நான் வசந்த காலத்திற்கு ஆயத்தமாக இருக்கிறேன். வளர்ச்சியையும், பசுமையையும், மென்மையாக வீசும் காற்றையும், இதமான நாட்களையும், நான் அனுபவிக்க விரும்புகிறேன்.
வசந்தம் எனக்கு புதிய நன்மைகளை கொண்டு வரட்டும், குளிர்காலம் என் வாழ்வில் போதும். ஆனால் நீரே இவ்விரு பருவங்களுக்கும் காரணர் என்பதை சங்கீதக்காரன் எனக்கு நினைவூட்டுகிறார். உமது வல்லமையால், ஆறுகளை உறையவைக்கவோ அல்லது உருக்கவோ உம்மால் கூடும். உம்மால் காற்றை பணிப்புயலாக வீசச்செய்யவோ, பனித்துளிகளாக பின்னவோ கூடும். உமது வல்லமை என்னை வியக்க வைக்கிறது. உமது அற்புதமான கிரியைகளால் திகைத்துப்போகிறேன். என் கர்த்தாவே, உமது அதிசயங்களை என்னிலும் செய்யும்படியாக உம்மை வேண்டிக்கொள்ளுகிறேன். நேர்த்தியாக என் வாழ்க்கையை வனைந்து, என் உறைந்த சிந்தனைகளை நீரோடைகளாக உருக்கவும். நான் சொல்லும், செய்யும் எல்லாவற்றிலும் உமது வல்லமையை விளங்கச் செய்யும்.
உங்கள் பாவங்கள் சிவேரென்றிருந்தாலும் உறைந்த மழையைப் போல் வெண்மையாகும்; ஏசாயா 1:18
- Details
- Category: என் நேசரே தியானங்கள்
கர்த்தாவே, உமது கிருபை வானங்களில் விளங்குகிறது; உமது சத்தியம் மேகமண்டலங்கள் பரியந்தம் எட்டுகிறது. - சங்கீதம் 36:5
அன்புள்ள ஆண்டவரே, என்மேல் உள்ள உமது உறுதியான அன்பினால் ஆறுதல் அடைகிறேன். உம்முடைய அன்பின் நிறைவு என்னை பிரம்மிப்பில் ஆழ்த்துகிறது. நான் அனேகருக்கு விரும்பத்தகாதவனாக இருக்கும் போதும் என்மேல் உள்ள உம்முடைய அன்பு என்னை வியக்க வைக்கிறது.
என்மேல் உள்ள உமது அக்கரை என்னுடைய எல்லா தேவைகளையும் பூர்த்தி செய்கிறது. என்மேல் உள்ள உமது அன்பை புரிந்து கொள்ளவோ அதை அளக்கவோ எனக்கு போதிய அறிவு கிடையாது. வானத்தின் நட்சத்திரங்கள் உமது அன்பின் விரிவையும், சூரியன் உமது அன்பின் சுகத்தையும், மழை என்மீது நீர் பொழியும் உமது ஆசீர்வாதங்களையும் நினைவூட்டுகிறது. நன்றி
ஆண்டவரே, உமது அற்புதமான அன்பிற்காக, உமக்கு நன்றி!
இன்று நீ வெளியே சென்று, உன் நிழலை நீ காண முடிந்தால் கடவுளுக்கு நன்றி செலுத்து! அவர் உன் வலது பக்கத்தில் உன் நிழலாய் இருக்கிறார்.