- Details
- Category: என் நேசரே தியானங்கள்
கர்த்தாவே, உம்முடைய தயவினால் நீர் என் பர்வதத்தைத் திடமாய் நிற்கப்பண்ணியிருந்தீர்; உமது முகத்தை நீர் மறைத்துக்கொண்டபோதோ நான் கலங்கினவனானேன். - சங்கீதம் 30:7
ஆண்டவரே உமது கிருபையும், தயவும் என்னை நிலை நிற்கச்செய்கிறது. என்னை நம்பிக்கையில் வளரச் செய்கிறது.
நான் என் வாழ்க்கையின் சோதனை காலங்களில் பல நன்மையான காரியங்களை கற்றுக்கொண்டேன்.
இவை அனைத்தும் நீர் எனக்கு கற்றுத் தந்த பாடங்கள். இந்த பாடங்கள் அனைத்தும் எனது வாழ்வில் முக்கியமானவை.
எனது வெற்றிகளுக்காகவோ, ஆசீர்வாதங்களுக்காகவோ நான் பெருமைக் கொள்ளக் கூடாது என நான் கற்றுக் கொண்டேன்.
எனது வாழ்வில் உள்ள ஒவ்வொரு நன்மைகளுக்கும் நீரே காரணர் என்று கற்றுக் கொண்டேன். நீர் கற்றுத் தந்த பாடங்கள் எனது உள் உணர்வுகளை வலுப்படுத்தி, எனது நம்பிக்கையை பெருகப் பண்ணியிருக்கிறது. அதற்காக உம்மை துதிக்கிறேன்! உம்மை பணிக்கிறேன்!
இன்று நீங்கள் ஒரு மலையை நேரிலோ அல்லது படத்திலோ பார்க்கும்போது நீங்கள் நினைவில் கொள்ள வேண்டியது என்னவென்றால் அந்த மலையின் உறுதியை போலவும், பிரம்மாண்டத்தை போலவும், கர்த்தர் உங்களை நிலை நிறுத்தியிருக்கிறார் என்றும், அவருடைய கிருபையால் உங்கள் விசுவாசத்தை நிலைநாட்டிருக்கிறார் என்றும் அறியுங்கள். கர்த்தரின் கிருபை என்றுமுள்ளது
- Details
- Category: என் நேசரே தியானங்கள்
உமது விரல்களின் கிரியையாகிய உம்முடைய வானங்களையும், நீர் ஸ்தாபித்த சந்திரனையும், நட்சத்திரங்களையும் நான் பார்க்கும்போது, மனுஷனை நீர் நினைக்கிறதற்கும், மனுஷகுமாரனை நீர் விசாரிக்கிறதற்கும் அவன் எம்மாத்திரம் என்கிறேன். - சங்கீதம் 8:3-4
ஆண்டவரே, என்மீது உள்ள உமது அன்பின் ஆழம் என்னை பிரமிக்கவைக்கிறது. என்னைப் பற்றிய உமது யோசனைகள் எண்ணில் அடங்காதவை. எனது வாழ்க்கைக்கான உமது திட்டம் நேர்த்தியும், நிரந்தரமுமானவை.
இந்த பிரபஞ்சத்தில் நீர் என்னை வெறும் பொருளாகக் கருதினால், நான் ஒரு தூசியிலும் அர்ப்பமானவன்.
ஆனால் நீரோ என்னை உமது பிள்ளையாக நடத்தி, உமது கிருபையினால் முடிசூட்டியிருக்கிறீர். என் ஆண்டவரே உமது அன்பிற்கு நான் என்னைத் தாழ்த்துகிறேன். உம்மை பணிகிறேன். என் தேவனே நான் உமக்குச் சொந்தமாக இருப்பதிலும், உம்மோடு உறவாடுவதிலும் மகிழ்கிறேன்.
மனுஷனை நீர் நினைக்கிறதற்கும், மனுஷகுமாரனை நீர் விசாரிக்கிறதற்கும் அவன் எம்மாத்திரம் என்கிறேன்.
- Details
- Category: என் நேசரே தியானங்கள்
எங்கள் ஆண்டவராகிய கர்த்தாவே, உம்முடைய நாமம் பூமியெங்கும் எவ்வளவு மேன்மையுள்ளதாயிருக்கிறது. - சங்கீதம் 8:9
ஆனந்தமாய், ஆனந்தமாய், உம்மை துதிக்கிறோம்.
மகிமையின் தேவனே! அன்பின் ஆண்டவரே!
எம் இதயம் பூவைப் போல் மலர்கிறது.
சூரியன் மேலே உதிக்கும்போது,
பாவமும், சோகமும் மறைகிறது;
சந்தேக இருளை விரட்டுகிறது;
அழியாத மகிழ்ச்சியைக் கொடுப்பவரே!
மெய் ஒளியால் எம்மை நிரப்புமே!
-ஹென்ரி வோன் டைக்
பூமியை ஆளுகின்றவர்களுடைய அதிகாரம் இறைவனால் வழங்கப்படும் கொடை.
மனிதனின் ஞானமோ, அறிவோ, பெலமோ, செல்வமோ பூமியில் ஒரு புல்லை கூட உருவாக்க முடியாது. ஆனால் பிரம்மாண்ட மலைகளும், இயற்கையின் செழிப்பும், ஆழ் கடலும், கர்த்தருடைய வார்த்தையால் உருவானவை!
- Details
- Category: என் நேசரே தியானங்கள்
கர்த்தர் ஜலப்பிரவாகத்தின்மேல் உட்கார்ந்திருக்கிறார்; கர்த்தர் என்றென்றைக்கும் ராஜாவாக வீற்றிருக்கிறார்.
கர்த்தர் தமது ஜனத்திற்குப் பெலன்கொடுப்பார்; கர்த்தர் தமது ஜனத்திற்குச் சமாதானம் அருளி, அவர்களை ஆசீர்வதிப்பார். சங்கீதம் 29:10-11
நீர் என் ராஜா, என் ஆண்டவரே. உம்முடைய நாமம் ஆசீர்வதிக்கப்பட்டது.
உமது மிகுந்த அன்பின் வல்லமையினால் பூமியை ஆளுகிறீர்.
நீர் எமது உள்ளங்களில் வாசம் செய்து எம்மை போதித்து மனசமாதானத்தை தந்து வழிநடத்துகிறீர்.
நீர் உம்முடைய பிள்ளைகளுக்கு மகத்துவமமும், நெருக்கமுமானவர்.
நீரே என் கர்த்தரும், நேசருமானவர். என் ஜீவனுள்ள நாளெல்லாம் உம்மை துதிப்பேன்.
கடவுள் எல்லையற்ற வட்டம்
அதன் மையம் எல்லா இடங்களிலும் உள்ளது
அதன் சுற்றளவு எங்கும் இல்லை.
- புனித ஆகஸ்டின்
- Details
- Category: என் நேசரே தியானங்கள்
கர்த்தருடைய வேதம் குறைவற்றதும், ஆத்துமாவை உயிர்ப்பிக்கிறதுமாயிருக்கிறது; கர்த்தருடைய சாட்சி சத்தியமும், பேதையை ஞானியாக்குகிறதுமாயிருக்கிறது. - சங்கீதம் 19:7
என் ஆத்துமாவை புதுப்பித்தருளும், ஆண்டவரே! நான் உமது வேதத்தை வாசிக்கும் போது என் ஆத்துமாவை புதுப்பித்தருளும்.
என்னோடு பேசும், ஆண்டவரே! என்னிடம் தெளிவாக, எனக்கு புரியும் விதத்தில், என் ஆத்துமாவை தேற்றுகின்ற விதத்தில் என்னோடு பேசும்.
எனது பழைய வாழ்க்கையில் புதிய வாழ்க்கையின் சுவாசத்தை தந்தருளும். நான் எப்படி வாழவேண்டும் என்று எனக்கு கற்றுத்தாரும். என்னை தேற்றும். எனது ஆத்துமாவை ஊக்குவித்தருளும்.
எனது விசுவாச வாழ்க்கையில் புதிய பரிமாணங்களை காணச்செய்யும். புதிய உறவுகளைத் தந்து அவற்றை வளர்க்கக் கற்றுதாரும்.
நான் இதுவரை செய்யாத, செய்ய பயந்த பெரிய காரியங்களைக் செய்ய எனக்கு ஊக்கத்தையும், தைரியத்தையும் தந்தருளும். கடந்த காலங்களில் நான் சந்தித்த தடைகளை மேற்கொள்ள உமது வல்லமையை என்னில் விளங்கசெய்யும்.
தேவனுடைய வார்த்தையானது ஜீவனும் வல்லமையும் உள்ளதாயும், இருபுறமும் கருக்குள்ள எந்தப் பட்டயத்திலும் கருக்கானதாயும், ஆத்துமாவையும் ஆவியையும், கணுக்களையும் ஊனையும் பிரிக்கத்தக்கதாக உருவக் குத்துகிறதாயும், இருதயத்தின் நினைவுகளையும் யோசனைகளையும் வகையறுக்கிறதாயும் இருக்கிறது. - எபிரெயர் 4:12
- Details
- Category: என் நேசரே தியானங்கள்
கர்த்தாவே, ஏன் தூரத்தில் நிற்கிறீர்? ஆபத்து நேரிடுகிற சமயங்களில் நீர் ஏன் மறைந்திருக்கிறீர்? - சங்கீதம் 10:1
என் ஆண்டவரே, நீர் எங்கே இருக்கிறீர்? என் அருகில் இருக்கிறீரா? அல்லது வெகு தொலைவில் இருக்கிறீரா? சில நேரங்களில் நீர் என்னை விட்டு வெகு தொலைவில் இருப்பதாகவே தோன்றுகிறது. நீர் என்அருகில் இருப்பதை என்னால் உணரமுடியவில்லை. ஏன் என்றும் தெரியவில்லை.
நான் உம்மை விட்டு விலகி சென்றுவிட்டேனா? அல்லது எனக்குத் தான் அப்படி தோன்றுகிறதா? நான்உம்மை ஏதாவது ஒரு வகையில் புண்படுத்தி விட்டேனா? உம்மோடு உள்ள நெருக்கத்தை நான் ஏனோ உணர முடியவில்லை. இது எனக்குமட்டும் தான் இவ்வாறு தோன்றுகிறதா, அல்லது ஏதேனும் பிரச்சினை இங்கு உள்ளதா?
நான் உம்மையே சார்ந்து இருப்பதில் உமக்கு விருப்பம் இல்லையோ? எதற்கெடுத்தாலும் உம்மை நான் அழைப்பதில் உமக்கு விருப்பம் இல்லையோ ?
ஆனால் என்னோடு எப்போதும் இருப்பேன் என்று வாக்களித்திருக்கிறீர். அதனால் நீர் என்னோடு இருக்கிறீர் என நம்புகிறேன். நீர் என்னை விட்டு விலகிச்செல்ல ஏதுவாக நான் ஏதாவது தவறு செய்தால் அதை மன்னியும் நான் எனது தவறுகளை எனக்கு அவற்றை உனர்த்தி அவற்றை நான் திருத்திக்கொள்ள கற்றுத்தாரும்.
எனது மீறுதல்களும், பாவங்களும் உம்மை வருத்தப்பட செய்திருந்தாலும், நீர் என்னை விட்டு விலகிச் செல்லாமல் என்னோடு இருப்பீராக. என்னைத் தொடர்ந்து வழி நடத்துவீராக!
நமது உடல் தசையைப் போல, விசுவாசமும் வலுவான எதிர்ப்பைச் சந்திக்கும் போது பலமடைகிறது.
- Details
- Category: என் நேசரே தியானங்கள்
தேவனையே நோக்கி என் ஆத்துமா அமர்ந்திருக்கிறது; அவரால் என் இரட்சிப்பு வரும். அவரே என் கன்மலையும், என் இரட்சிப்பும், என் உயர்ந்த அடைக்கலமுமானவர்; நான் அதிகமாய் அசைக்கப்படுவதில்லை. சங்கீதம் 62:1
சில நேரங்களில், ஆண்டவரே, நான் எல்லாவற்றையும் விட்டுவிட்டு விலகிச் செல்ல எண்ணுகிறேன். அமைதியான வாழ்க்கையையும், போதுமான ஓய்வையும் நான் விரும்புகிறேன். நீர் என் ஓய்வைக்கருதி தந்துள்ள வசதிகளுக்காக நன்றி. பல சமயங்களில் என்னால் ஈடுகொடுக்க முடியாத ஆளவிற்கு வாழ்க்கை எப்போதும் பரபரப்பாக சுழல்கிறது. அடுத்த வேளை என்ன நடக்குமோ என்று நான் கவலைப்பட ஆரம்பிக்கிறேன். இந்த கவலைகள் என் மன அழுத்தத்தை அதிகரிக்கிறது. இந்த அழுத்தம் நான் வேலை செய்யும் முறையையும், மற்றவர்களுடன் நான் பழகும் முறையையும் பாதிக்கிறது. பல தவறுகளை செய்கிறேன். அவைகள் எனது நட்பையும், உறவுகளையும் பாதிக்கிறது. அவைகள் என்னை மேலும் கவலைப்பட வைக்கிறது. எனவே ஆண்டவரே, இப்போது நான் அமைதியை தேடி, ஓய்வைத் தேடி உமது உதவிக்காக உம்மிடம் திரும்பி வருகிறேன். எனக்குத் தேவையான அமைதியையும், ஓய்வையும், பிரச்சனைகளில் இருந்து விடுதலையையும் நீர் வழங்குவீர் என்று நான் நம்புகிறேன்.
நீங்கள் ஒன்றுக்குங் கவலைப்படாமல், எல்லாவற்றையுங்குறித்து உங்கள் விண்ணப்பங்களை ஸ்தோத்திரத்தோடே கூடிய ஜெபத்தினாலும் வேண்டுதலினாலும் தேவனுக்குத் தெரியப்படுத்துங்கள்.
அப்பொழுது, எல்லாப் புத்திக்கும்மேலான தேவசமாதானம் உங்கள் இருதயங்களையும் உங்கள் சிந்தைகளையும் கிறிஸ்து இயேசுவுக்குள்ளாகக் காத்துக்கொள்ளும். - பிலிப்பியர் 4:6-7