- Details
- Category: என் நேசரே தியானங்கள்
சங்கீதம் 7:17. நான் கர்த்தரை அவருடைய நீதியின்படி துதித்து, உன்னதமான கர்த்தருடைய நாமத்தைக் கீர்த்தனம் பண்ணுவேன்.
என் ஆண்டவரே, சங்கீதக்காரனோடு சேர்ந்து நானும் உமக்கு நன்றி செலுத்துகிறேன். நீர் என் வாழ்வை எல்லா வளங்களுடனும் ஆசீர்வதித்திருக்கிறீர். ஒவ்வொரு நாளும் உம்மை நன்றியோடு துதிப்பேன். என்னுடய ஒவ்வொரு மூச்சும் நீர் தந்த ஈவு. என்னுடைய ஒவ்வொரு அசைவும் நீர் என்னில் நடத்தும் அற்புதம். நானும், என்னுடையவைகளும் உமக்கே சொந்தம். என் நேசரே, என் இதயத்தின் வெளிப்பாட்டை, நான் உம்மை புகழ்ந்து பாடும் பாடலாக ஏற்றுக்கொள்ளும். எனது வாழ்க்கை நான் உமக்கு கொடுக்கும் ஒரு காணிக்கையாக இருக்கட்டும்.
கிறிஸ்துவின் வசனம் உங்களுக்குள்ளே சகல ஞானத்தோடும் பரிபூரணமாக வாசமாயிருப்பதாக; சங்கீதங்களினாலும், கீர்த்தனைகளினாலும், ஞானப்பாட்டுகளினாலும் ஒருவருக்கொருவர் போதித்து புத்திசொல்லிக்கொண்டு, உங்கள் இருதயத்திலே கர்த்தரைப் பக்தியுடன் பாடி, வார்த்தையினாலாவது கிரியையினாலாவது, நீங்கள் எதைச் செய்தாலும், அதையெல்லாம் கர்த்தராகிய இயேசுவின் நாமத்தினாலே செய்து, அவர் முன்னிலையாகப் பிதாவாகிய தேவனை ஸ்தோத்திரியுங்கள். கொலோசெயர் 3:16-17